தோட்டத்தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை கோரி தொடர்ச்சியாக நடத்தி வரும் போராட்டம் நியாயமானது. அதற்கு எமது பூரண ஆதரவை வழங்குகின்றோம் எனத்தெரிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்களும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
ஆயிரம் ரூபா சம்பள அதிகாரிப்பை வலியுறுத்தி தோட்டத்தொழிலாளர்கள் போராட்டம் தொடர்ந்தவண்ணமிருக்கின்ற நிலையில் அது குறித்து கருத்து வெளியிட்ட பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவா மேலும் தெரிவிக்கையில்,தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கின்றபோதும் அது நிறைவேற்றப்படாத நிலைமையே தொடர்ச்சியாக இருக்கின்றது. அதேபோன்று தான் கூட்டு ஒப்பந்தமும் கடந்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியாகிவிட்டது. அந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதில் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் நீடித்தவண்ணமிருக்கின்றன.
இவ்வாறான நிலையிலேயே தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை கோரி போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ச்சியாக அதில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களின் போராட்டம் நியாயமானது. வடக்கு கிழக்கை பிரதிநிதிதித்துவப்படுத்தும் எமது கூட்டமைப்பு அந்தப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றது. அவர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டியதாகவுள்ளன.
ஆட்சியில் உள்ள அரசாங்கம் மற்றும் மலையக கட்சிகள், தொழிற்சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் தோட்டத்தொழிலாளி ஒருவருக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்வருவதோடு கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 730ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் மற்றும் ஏனைய பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
தற்காலிக தீர்வாக இவ்வாறு இணக்கப் பாடு எட்டப்பட்டிருந்தாலும் அந்த தொழிலா ளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம் ஆயிரம் ரூபா சம்பள அதிக ரிப்பை பெற்றுக்கொடுக்கவேண்டும்.
அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் அனைத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு மையான ஆதரவை வழங்க தயாராகவுள்ளது என்றார்.
அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் அனைத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு மையான ஆதரவை வழங்க தயாராகவுள்ளது என்றார்.
No comments:
Post a Comment