தமிழ் மக்கள் நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை விரும்பவில்லை. எனவே இனிவரும் காலங்களில் இது தொடர்பில் நாட்டின் இளைஞர், யுவதிகளையும் வலியுறுத்த வேண்டுமென கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மாத்தறையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த காலத்தில் இடம்பெற்றது போன்றதொரு யுத்தம் எமது நாட்டில் மீண்டும் இடம்பெறக் கூடாது. அதனை நாட்டில் வாழும் தமிழ் மக்களும் விரும்பவில்லை. அது தொடர்பில் நாட்டின் இளைஞர், யுவதிகளுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். மீண்டும் ஒரு யுத்தத்தினை ஏற்படுத்திவிட்டு அதனால் அவர்கள் பாதிப்படைய வேண்டிய தேவையும் தற்போது இல்லை. மாறாக அனைத்து சமூகங்களும் ஒன்றுபட்டு செயற்படுவதால் மட்டுமே நாட்டையும் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினையும் மேம்படுத்த முடியும்.
தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது. மாகாணங்களுக்கிடையிலான அதிகாரங்களை நீதியான முறையில் பகிர்ந்தளிப்பதே அரசியலமைப்பு உருவாக்கத்தின் பிரதான நோக்கமாகும்.குறிப்பாக ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் மாகாணங்களுக்கிடையிலான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து அரசியலமைப்பு புத்துருவாக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் சகலரும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
|
No comments:
Post a Comment